ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொ லையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்குச் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊடகவியலாளர்கள் இணைந்து உயர்நீதிமன்ற வாயிலில் இன்று வியாழக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படு கொ லை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தக் கொ லை வழக்குடன் தொடர்புடைய மூன்று நபர்களை விடுதலை செய்வதற்குச் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்திருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் இணைந்து பதாகைகளை ஏந்தியவாறு உயர்நீதிமன்ற வாயிலில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பல படு கொ லைகளுக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.







