யாழ்,வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன உந்துருளி இன்று (6) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் BCN 8166 எனும் இலக்கமுடைய உந்துருளியே நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து மருதங்கேணி பொலிசாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு மீட்கப்பட்ட உந்துருளியை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ADVERTISEMENT


