நல்லதண்ணி சியத்த கங்குல ஓயாவில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நல்லதண்ணி சியத்த கங்குல ஓயாவில் மிதந்த உடலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பதுளை பஸ்சரை ஒப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ருவான் சத்துரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.