யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் திரு.சீ இந்திரகுமார் தலைமையில் இந்த இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது. உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணிக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையாளர் , நலன்விரும்பிகளின் ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றனர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்.