மொனராகலை – பொத்துவில் வீதியில் வாகனமொன்றில் மோதி பாதசாரி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளதாக தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபராவார்.
விபத்தினை ஏற்படுத்திய வாகனம் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.