Browsing: இலங்கையர்

இலங்கை பிரஜைகளாகிய ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 28,095 பில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வரிக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு தொழிற்புரிவதாகவும், தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.