• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வவுனியாவில் நாளைய தினம் கண்டனப் போராட்டம்!

selvan by selvan
June 28, 2026
in இலங்கை செய்திகள்.
0
வவுனியாவில் நாளைய தினம் கண்டனப் போராட்டம்!
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் நாளைய தினம் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக வவுனியா மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவக்கையில்,

அன்பார்ந்த வவுனியா வர்த்தகப் பெருமக்களே,

“எமது நிலம்! எமது இருப்பு! நம்மை நாமே ஆள்வோம்!”

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், ஏதோ ஒரு வகையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இன்று அந்த ஒடுக்குமுறை புதிய வடிவம் பெற்று, வளர்ந்து வரும் எமது இளம் அரசியல் தலைமுறையையே ஆரம்பத்திலேயே அடக்கி ஆள முயற்சிக்கப்படுகிறது.

வவுனியாவின் முதலாவது மாநகரசபை உருவானபோது, தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இளம் தலைமுறையின் தலைமையில் ஆட்சியை அமைத்தன.

அந்த ஆட்சி வெறும் 90 நாட்களிலேயே மக்களின் நலனுக்காக வேகமாகவும் திறமையாகவும் செயல்பட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. இதனைக் கண்டு அச்சமடைந்த எதிர்த்தரப்பினர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்று, கடந்த எட்டு மாதங்களாக மாநகரசபையின் செயற்பாடுகளை முடக்கினர்.

அதன் பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்பட்டபோதிலும், ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எமது மண்ணின் முதலாவது மாநகர முதல்வரை பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளனர்.

மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியை, அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி எந்த சட்ட அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற கேள்வி இன்று ஒவ்வொரு ஜனநாயக விரும்பியினதும் மனதில் எழுகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

அப்படியிருக்க, விசாரணை நிறைவடைவதற்கு முன்பே பதவி நீக்கம் மேற்கொள்ளப்படுவது நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் முரணானதாகும்.

எந்தக் குறுக்கு வழியையும் பயன்படுத்தி வவுனியா மாநகராட்சியின் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியே இந்த நடவடிக்கை என மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

எனவே, இந்த ஜனநாயக விரோதமும் அராஜகமான போக்கையும் வன்மையாகக் கண்டித்து, தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் பொதுமக்களின் ஆதரவுடன் 2026 ஜூன் 29 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்தில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வவுனியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் வர்த்தகப் பெருமக்களாகிய தங்களிடமும் எமது அன்பான வேண்டுகோள்:

* திங்கட்கிழமை தங்களது வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடியை ஏற்றி ஜனநாயகத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறும்,
* பிற்பகல் 1.00 மணி வரை தங்களது வர்த்தக நிலையங்களை மூடி இந்த ஜனநாயகப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

ஐ.நா. விதியின் கீழ் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – 9 சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்

ஐ.நா. விதியின் கீழ் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – 9 சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்

by selvan
June 28, 2026
0

சித்திரவதைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற கொடூரத் தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, பின்னர் அதன் வரைமுறைகளை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன...

காதல் விவகாரம் – நபர் ஒருவர் நடுரோட்டில் வெடிக் கொலை!

காதல் விவகாரம் – நபர் ஒருவர் நடுரோட்டில் வெடிக் கொலை!

by selvan
June 28, 2026
0

மாத்தறை மாவட்டம், வெலிகமை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இளம் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொடூர சம்பவம்...

காட்டு யானை தாக்கியதில்குடும்பஸ்தர் பரிதாபப் பலி!

காட்டு யானை தாக்கியதில்குடும்பஸ்தர் பரிதாபப் பலி!

by selvan
June 28, 2026
0

அனுராதபுரம் மாவட்டம், மிகிந்தலை பிரதேசத்தில் காட்டு யானையொன்று தாக்கியதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தத் துயரச்...

தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

by selvan
June 28, 2026
0

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக,...

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

by selvan
June 28, 2026
0

பொசன் பண்டிகை காலப்பகுதியில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...

அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு நேரடியாக சட்ட நடவடிக்கை!

by selvan
June 28, 2026
0

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு...

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

by selvan
June 28, 2026
0

2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின்...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி