• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!

selvan by selvan
June 17, 2026
in உலக செய்திகள்
0
உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!
Share on FacebookShare on Twitter


உலகில் உள்ள ஒட்டுமொத்த சிறுவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியின் காரணமாக மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.

மேலும், 1.2 பில்லியன் சிறுவர்கள் அதீத வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிரம் அடைந்து வரும் காலநிலை மாற்ற அபாயங்களினால் சிறுவர்களே “மிகக் கடுமையான பாதிப்புகளை” எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ள யுனிசெப் அமைப்பு, சிறுவர்கள் மீதான இந்த பாதிப்புகளைக் குறைப்பதற்காக உட்கட்டமைப்பு, காலநிலை தழுவல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திறன்களில் அரசாங்கங்கள் அவசரமாக முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

யுனிசெப் அமைப்பின் புள்ளிவிபர முகாமையாளரும், இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ரோகிணி சம்பூர்ணம் சுவாமிநாதன் இது குறித்துக் கூறுகையில்,

“சிறுவர்கள் வெள்ளம், வறட்சி அல்லது வெப்ப அலை போன்ற ஏதேனும் ஒரு தனித்தனி ஆபத்துகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் பலதரப்பட்ட ஆபத்துகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் சுமார் 1.1 பில்லியன் சிறுவர்கள் ஒரே நேரத்தில் குறைந்தது மூன்று காலநிலை அபாயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என இந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய தொடர்ச்சியான மற்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த ஆபத்துகள் அரசாங்கங்களையும் சமூக சேவைகளையும் முடக்கிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையானது வான் மாசுபாடு, மலேரியா போன்ற நோய்த்தாக்கங்கள், அத்துடன் உலகளவில் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் கிடைப்பதற்கான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 662 மில்லியன் சிறுவர்கள் வெப்பமண்டல சூறாவளிகளாலும், 337 மில்லியன் சிறுவர்கள் நதி வெள்ளங்களாலும், 33 மில்லியன் சிறுவர்கள் கடலோர வெள்ளங்களாலும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

ஆபிரிக்க பிராந்தியத்தை மையமாகக் கொண்டு சுமார் 1 பில்லியன் சிறுவர்கள் மலேரியா நோய் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், 85 நாடுகளில் உள்ள 242 மில்லியன் சிறுவர்களின் பாடசாலைக் கல்வி காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக சோமாலியா, மடகாஸ்கர், மியான்மர், கம்போடியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை யுனிசெப் அடையாளம் கண்டுள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்படும் அதிகளவான சிறுவர்கள் பங்களாதேஷ், இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் தான்சானியா போன்ற விவசாயத்தை நம்பியிருக்கும் பொருளாதார நாடுகளிலேயே வாழ்கின்றனர்.

அதேநேரம், கடலோரப் பகுதிகள் இல்லாத நிலப்பரப்பு நாடுகளும் வறட்சி, பாலைவனமாதல் மற்றும் திடீர் வெள்ளம் போன்ற கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதுடன், போட்ஸ்வானா மற்றும் புர்கினோ பாசோ போன்ற நாடுகளில் நீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் என யுனிசெப் எச்சரித்துள்ளது.

Related Posts

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!

by selvan
June 17, 2026
0

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (17) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன.சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக...

பாகிஸ்தானில் 4 இல் ஒரு வீட்டில் சிறுவர் தொழிலாளர்கள்!

பாகிஸ்தானில் 4 இல் ஒரு வீட்டில் சிறுவர் தொழிலாளர்கள்!

by selvan
June 17, 2026
0

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சிறுவர் வீட்டுத் தொழிலாளர்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த போதிலும், தற்போதும் அங்குள்ள ஒவ்வொரு நான்கு வீடுகளிலும் ஒரு...

வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு – பலர் கைது!

வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு – பலர் கைது!

by selvan
June 17, 2026
0

வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற யு.எஃப்.சி (UFC) தற்காப்புக் கலை விளையாட்டை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த சதி முயற்சியை முறியடித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ...

அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!

அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!

by selvan
June 17, 2026
0

கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை...

லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம்  தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!

லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம்  தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!

by selvan
June 17, 2026
0

லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ...

கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

by selvan
June 17, 2026
0

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அப்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நிலை-1...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 17, 2026
0

சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த...

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

by selvan
June 17, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு  தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

by selvan
June 16, 2026
0

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் நகரம் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. பாலிஸ்டிக்...

சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்!

by selvan
June 16, 2026
0

ரஷ்யாவின் அதிநவீன ‘Tu-22M3’ ரக உத்திசார் குண்டுவீச்சு விமானம் ஒன்று, சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. நேற்று வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி