• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளுக்கு ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற ; பள்ளிவாசல் முன்னிற்க வேண்டும்!!

Bharathy by Bharathy
May 16, 2026
in இலங்கை செய்திகள்
0
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளுக்கு ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற ;  பள்ளிவாசல் முன்னிற்க வேண்டும்!!
Share on FacebookShare on Twitter

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் புதன்கிழமை (13) இரவு அதன் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது நகர சபைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் இரு மாத காலத்தினுள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு, அதனை வர்த்தமானியில் பிரசுரிக்குமாறும் அதன் பின்னர் தேர்தலை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதனை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கும் அதன் பிரகாரம் சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிப்பதற்கும் அதற்கான கட்டிட வசதிகள் மற்றும் ஆளணி உள்ளிட்ட பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கும் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பதற்கும் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்த விடயங்களை மத்திய அரசின் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை என்பனவே செயற்படுத்த வேண்டிய பொறுப்புடமையைக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கரிசணையுடனான துரித நடவடிக்கைகளை சாத்தியப்படுத்த வேண்டுமாயின் இந்த மண்ணின் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரவின் நெறுங்கிய தோழராகவும் திகழ்கின்ற அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. எனவே இந்த விடயத்தில் அவர் முழு மூச்சுடன் ஈடுபடுவதற்கு ஊர் சமூகத்தினரால் ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

ஆகையினால் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களை முன்னிலைப்படுத்தி, செயற்படுவதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபை அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாய்ந்தமருது நகர சபைக்கான முதலாவது தேர்தலானது, சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரே நடத்தப்படும். தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு, போதிய கால அவகாசம் வழங்கப்பட்டே தேர்தல் நடைபெறும் என்பதால் இப்போதே தேர்தலை முன்னிலைப்படுத்தி, வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதற்கு எந்த அவசரமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, முதலில் சபையை வெற்றிகரமாக ஸ்தாபிப்பதற்கும் அதற்கான வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்குமான செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிவாசல் தலைமையில் ஒன்றிணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் எனவும் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு!!

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு!!

by Bharathy
May 16, 2026
0

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச்  சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன...

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!

by Bharathy
May 16, 2026
0

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில்  ஜனாதிபதி   எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின்  வருகையை முன்னிட்டு...

டிஜிட்டல் உலகில் மாணவர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயலமர்வு!!

டிஜிட்டல் உலகில் மாணவர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயலமர்வு!!

by Bharathy
May 16, 2026
0

நீர்கொழும்பு - கொச்சிக்கடை NG/தோப்பு தோமஸ் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில், “டிஜிட்டல் உலகின் பாதுகாப்பும் பொறுப்பும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு 15 ஆம்...

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

by Bharathy
May 16, 2026
0

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2025...

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

by Bharathy
May 15, 2026
0

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

by Bharathy
May 15, 2026
0

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை...

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

by Bharathy
May 15, 2026
0

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில்...

நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!

by Bharathy
May 15, 2026
0

பலத்த மழை காரணமாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 15...

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

by Bharathy
May 15, 2026
0

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை...

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

by Bharathy
May 15, 2026
0

அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி