அமரர் செல்வராஜா ராணி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 28.02.2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அத்துடன், எங்கள் அம்மாவின் பிரிவுச் செய்தி கேட்டு ஓடி வந்து எமது துக்கத்தில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உணவளித்து ஆறுதல் தந்த அன்பு உள்ளங்களுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டோருக்கும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும், வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நினைவு மலருக்கு ஆக்கங்களை தந்து உதவியோருக்கும், ஏனைய சகல உதவிகளையும் புரிந்த அன்பர்கள், நண்பர்கள் உறவினர்களுக்கும், நினைவு மலரை அழகாக செய்து தந்த சஞ்சீவன் அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்துடன் அம்மாவின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட தினகரன் உரிமையாளர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்ல அன்றே மறப்பது நன்று.
குடும்பத்தினர்
செல்வராஜா ராணி பிள்ளைகள்
அராலி வீதி, சங்கானை (சுவிஸ்)










