• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

சீனாவின் வலுவான நகர்வு… அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு பாதகம்.!

admin by admin
December 31, 2025
in உலக செய்திகள்
0
சீனாவின் வலுவான நகர்வு… அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு பாதகம்.!
Share on FacebookShare on Twitter

ஆர்க்டிக் பகுதியில் சீனாவின் வலுவான அதிரடி நகர்வுகள் குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தற்போது மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தக் கோடையில், சீனாவின் ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்முறையாகப் பனிப்பாறைக்குக் கீழே ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் பயணம் செய்து சாதித்துள்ளதே, அமெரிக்க தரப்பின் கவலைகளுக்கு காரணம்.

சீனா முன்னெடுத்துள்ள இத்தகைய பயணங்கள் உருகும் பனிக்கட்டிகளுக்கு அடியில் உள்ள இயற்கை வளங்கள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கக்கூடும்.மட்டுமின்றி, வணிகக் கப்பல்களுக்கான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா உட்பட சாத்தியமான இலக்குகளுக்கு மிக அருகில் நிலைநிறுத்துவதற்கு இந்தத் தரவுகள் உதவும்.

அத்துடன், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் சீனக் கப்பல்களும் பெரும்பாலும் இராணுவ உளவு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால், ஆர்க்டிக் பகுதியில் தங்களது நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவை மற்றும் சட்டப்பூர்வமானவை என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இப்பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களித்து வருவதாக விளக்கமளித்துள்ளது.இருப்பினும் சீனாவின் இந்த வலுவான நகர்வுகள் தொடர்பில் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். கடல் மற்றும் காலநிலை அறிவியலில் சீனா முன்னணியில் இருக்க இலக்கு வைத்துள்ளது, ஏனெனில், கடலையும் காலநிலையையும் புரிந்துகொள்வது, கடற்படை நடவடிக்கைகளில், குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போரில் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணியாக அமைகிறது.

சீனா, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு வழிகாட்டவும், அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்க உதவவும் கணினி மாதிரிகளை உருவாக்குவதற்காக, உலகின் பெருங்கடல்களைப் பற்றிய தரவுகளைத் திரட்டி வருகிறது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய நீர்மூழ்கிக் கப்பல்களின் இந்தச் சாதனை, High North பகுதிக்குள் தனது இராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் முயற்சிகளின் சமீபத்திய உதாரணம் என்று தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது வாதிடுகின்றனர்.

மட்டுமின்றி, ஆர்க்டிக் வழியாக எதிர்கால கடல் பாதைகளை உலகளாவிய வர்த்தகத்திற்கான குறுக்குவழியாக சீனா கருதுகிறது, கோடை காலத்தில் வட துருவத்தைத் தவிர்த்து, போலந்தின் க்டான்ஸ்க் துறைமுகத்திற்கு ஒரு சரக்குக் கப்பலை அனுப்பி அதை உறுதி செய்துள்ளது.அந்தப் பாதை சூயஸ் கால்வாய் வழியாகச் செல்வதை விட இரு மடங்கு வேகமானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அதன் பிறகு, ரஷ்யாவுடன் இணைந்து ஆர்க்டிக் பகுதி வழியாக சரக்கு போக்குவரத்தை, குறிப்பாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தை, விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அடுத்த சில ஆண்டுகளுக்குள் சீனாவால் ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை வட துருவத்திற்கு அனுப்ப முடியும் என்று இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு எதிர்பார்க்கிறார்கள்.சீனாவுடன் இந்த முயற்சிகள் அனைத்திற்கும் ரஷ்யாவும் பங்களித்து வருவதாகவே நம்பப்படுகிறது.

இந்த நிலையில், சீனா மற்றும் ரஷ்யாவால் பசிபிக் பகுதியில் உள்ள அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது என அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு பிரான்ஸ் இராணுவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.அட்லாண்டிக் பெருங்கடலில் ஆசியப் படைகள் குவிக்கப்பட்டால், அது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ட்ரம்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி!

by selvan
July 1, 2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்ப கிரிப்டோகரன்சி வணிகங்கள் மூலம், கடந்த ஓராண்டில் மாத்திரம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவரது புதிய...

அமெரிக்கா மற்றும் கனடாவில் தீவிரமடையும் வெப்ப அலை!

அமெரிக்கா மற்றும் கனடாவில் தீவிரமடையும் வெப்ப அலை!

by selvan
July 1, 2026
0

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த வாரம் கடுமையான மற்றும் அபாயகரமான வெப்ப அலை தீவிரமடையக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவில் ஜூலை 4ஆம் திகதி...

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் 3,00,000 இற்கும் அதிகமான மின்னல்கள்!

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் 3,00,000 இற்கும் அதிகமான மின்னல்கள்!

by selvan
July 1, 2026
0

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது....

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் நியமனம்!

by selvan
July 1, 2026
0

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக்கை (Han Seong-sook) நியமனம் செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.ஹான் சியோங்-சுக், தென் கொரியாவின் முன்னணி இணைய நிறுவனமான...

வெனிசுலாவில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3வயது சிறுவன் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3வயது சிறுவன் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

by selvan
July 1, 2026
0

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன் ஒருவன், 6 நாட்களுக்குப்...

சீனாவின் முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்காவில் சிறை தண்டனை!

சீனாவின் முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்காவில் சிறை தண்டனை!

by selvan
June 30, 2026
0

ஒரு பில்லியன் டொலர் நிதி மோசடி வழக்கில், சீனாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான குவோ வெங்குய்க்கு அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஒரு காலத்தில்...

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 12 பேர் பலி!

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 12 பேர் பலி!

by selvan
June 30, 2026
0

உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி...

அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது – அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி!

அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது – அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி!

by selvan
June 30, 2026
0

அமெரிக்க மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' (Federal Reserve) வங்கியின் ஆளுநர் லிசா குக் ஐ தற்போதைய நிலையில் பணி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க...

வெனிசுலா நிலநடுக்கம் – 1700 ஐக் கடந்த உயிரிழப்புக்கள்!

by selvan
June 30, 2026
0

வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,...

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட்ஸ் வரை அரசுக்குச் செலுத்த வேண்டும்!

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட்ஸ் வரை அரசுக்குச் செலுத்த வேண்டும்!

by selvan
June 30, 2026
0

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி