1990
கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.
1801
பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும் 36 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.
1804
ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆரன் பர், முன்னாள் அமெரிக்க நிதியமைச்சர் அலெக்சாண்டர் ஆமில்டன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற இரட்டையர் சண்டையில் ஆமில்ட்டன் படுகாயமடைந்தார்.
1811
வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.
1833
மேற்கு அவுஸ்திரேலியாவில் வெள்ளையினக் குடியேறிகளைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த நூங்கார் அவுஸ்திரேலியப் பழங்குடி வீரர் யாகன் கொல்லப்பட்டார்.
1882
பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1893
முதன் முறையாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.
1893
நிக்கராகுவாவில் இராணுவப் புரட்சியை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார்.
1895
லூமியேர் சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.
1897
சாலொமொன் அந்திரே வடதுருவத்தை ஊதுபை மூலம் அடைய நோர்வேயின் இசுப்பிட்சுபெர்கன் நகரில் இருந்து புறப்பட்டார். இவரது ஊதுபை வீழ்ந்ததில் அவர் இறந்தார்.
1919
நெதர்லாந்தில் எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.
1921
செஞ்சேனைப் படையினர் மங்கோலியாவை வெள்ளை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர்.
1943
போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் உக்ரைனியத் தீவிரவாத இராணுவத்தினரால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர்.
1943
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: ஜேர்மனிய, இத்தாலியப் படையினர் நேச நாட்டுப் படைகள் மீது சிசிலியில் தாக்குதலைத் தொடுத்தனர்.
1950
பாகிஸ்தான் அனைத்துலக நாணய நிதியத்தில் இணைந்தது.
1951
1939 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த ஜேர்மனி மீதான போர் அறிவிப்பை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.
1960
தகோமி (பின்னர் பெனின்), மேல் வோல்ட்டா (பின்னர் புர்க்கினா), நைஜர் ஆகிய நாடுகளுக்கான விடுதலைக்கு ஆதரவாக பிரான்சு வாக்களித்தது.
1962
முதலாவது அத்திலாந்திக்கிடையேயான செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பானது.
1971
சிலியில் செப்புச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.
1973
பிரேசில் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
1978
எஸ்ப்பானியாவில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.
1979
அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.
1982
இத்தாலி மேற்கு ஜேர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1983
எக்குவாடோரில் போயிங் 737 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 119 பேரும் உயிரிழந்தனர்.
1991
ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியா, ஜித்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் உயிரிழந்தனர்.
1995
வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.
1995
செர்பிய இராணுவம் பொசுனிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2006
மும்பை ரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்.
2010
உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.














