1803
லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
1826
அமெரிக்காவின் 3ஆவது அரசுத்தலைவர் தாமசு ஜெஃபர்சன், 2ஆம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார். இதே நாளிலேயே அமெரிக்க விடுதலைச் சாற்றுரை 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொளப்பட்டது.
1827
நியூயோர்க் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1837
உலகின் முதலாவது அதி – தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
1862
லூயிஸ் கரோல் ஆலிசு லிடெலுக்கு ஒரு கதையைச் சொன்னார். இதுவே பின்னர் ஆலிசின் அற்புத உலகம் என வழங்கப்பட்டது.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பி, விக்சுபர்க் நகரம் 47 நாட்கள் முற்றுகையின் பின்னர் யுலிசீஸ் கிராண்ட் தலைமையிலான அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தது.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடக்கு வர்ஜீனியா இராணுவம் கெட்டிசுபெர்க்கு சண்டையில் தோல்வியடைந்ததை அடுத்து அங்கிருந்து விலக ஆரம்பித்தது.
1879
ஆங்கில – சூலூ போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1892
சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, திங்கட்கிழமை இரண்டு நாட்களாக வந்ததில், சமோவாவில் இவ்வாண்டு 367 நாட்களைக் கொண்டிருந்தது.
1898
நியூயோர்க்கில் இருந்து லே ஆவர் சென்று கொண்டிருந்த கப்பல் சேபில் தீவுக்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி மூழ்கியதில் 549 பேர் உயிரிழந்தனர்.
1903
பிலிப்பைன் – அமெரிக்கப் போர் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.
1911
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே பெரும் வெப்ப அலை தாக்கியதில் 380 பேர் வரை உயிரிழந்தனர்.
1914
சாரயேவோவில் ஆறு நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி சோஃபி ஆகியோரின் இறுதி நிகழ்வுகள் வியன்னாவில் இடம்பெற்றன.
1918
ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு மற்றும் அவரது குடும்பத்தினர் போல்செவிக்குகளினால் கொல்லப்பட்டனர் (யூலியன் நாட்காட்டி).
1934
அணுகுண்டுகளில் பின்னர் பயன்படுத்தப்பட்ட செயல் விளைவுத் தொடரின் வடிவமைப்புக்கு லியோ சிலார்டு என்பவர் காப்புரிமம் பெற்றார்.
1941
இரண்டாம் உலகப் போர்: ரீகா நகரில் யூத தொழுகைக் கூடம் ஒன்று நாட்சிகளால் 300 யூதர்களுடன் எரியூட்டப்பட்டது.
1941
நாட்சிகள் உக்ரைனில் லிவீவ் என்னும் இடத்தில் தாம் கைது செய்த போலந்து அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் 45 பேரைக் கொன்றனர்.
1942
இரண்டாம் உலகப் போர்: கிரிமியாவில் 250 நாள் செவஸ்தபோல் முற்றுகை அச்சுப் படைகள் அந்நகரைக் கைப்பற்றியதை அடுத்து முடிவுக்கு வந்தது.
1946
381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1947
பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
1951
வில்லியம் ஷாக்லி திரான்சிஸ்டரைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.
1961
சோவியத் அணுவாற்றல் நீர்மூழ்கி கே-19 தன வெள்ளோட்டத்தில் பழுதடைந்ததில் அதில் பயணம் செய்த 22 பேர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி காரணமாக அடுத்த இரு ஆண்டுகளில் இறந்தனர்.
1976
என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த நால்வரைத் தவிர ஏனையோரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.
1982
ஈரானிய தூதர்கள் மூவர், ஒரு ஊடகவியலாளர் லெபனானில் கடத்தப்பட்டனர். இவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை அறியப்படவில்லை.
1988
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் நடைபெற்றது.
1994
ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டா தலைநகர் கிகாலி ருவாண்டா தேசப்பற்று முன்னணியினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அந்நகரில் இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
1997
நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
1998
ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி ஏவியது.
2001
விளாதிவசுத்தோக் வானூர்தி ஒன்று இர்கூத்சுக்கை அணுகும் போது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 145 பேரும் உயிரிழந்தனர்.
2012
இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.














