களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த மாதம் தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர கரவனெல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 6 ஆம் திகதி தனது 38 ஆவது வயதில் காலமானார்.
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி. கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற இடத்தை நிரப்ப சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த ரணசிங்க, பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் கட்சிப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடித்தார்.