கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் நேற்று இரவு வருடாந்திர ஜாத்ரா (ஊர்வலம்) நடைபெற்றது. அப்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறையான அடிப்படை வசதிகள் செய்யாததே இச்சம்பவத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.