தமிழ்த் தேசியப் பேரவையின் மே தின எழுச்சிக் கூட்டம் இன்று மாலை 6:30 மணியளவில் நெல்லியடி மாலுசந்தியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய இரு பிள்ளைகளை மாவீரராக இனத்திற்கு வழங்கிய தாயாரால் பொதுச் சுடரேற்றபட்டது . தொடர்ந்து மங்கள விளக்கேற்றி மே தின எழுச்சிக் கூட்டம் ஆரம்பமானது .
இதன் பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், திரு. அருந்தவபாலன், எம் .கே. சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேசத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நலன் விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



