இஸ்ரேலில் உள்ள காட்டுப்பகுதிகளில் பாரிய காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக் காட்டுத்தீயினால் 13 பேர் காயமடைந்துள்ளனர் என்பதோடு உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வாகனங்கள், உலங்கு வானூர்திகள் என்பன தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள பல வீதிகளும் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை 10 ஆண்டுகளின் பின் இஸ்ரேலில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காட்டுத்தீயின் பரவல் அதிகரித்துள்ளதனால் இஸ்ரேலில் தேசிய அவசரகால நிலையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரகடனப்படுத்தியுள்ளார்.