மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டி வைத்திய அதிகாரி எம்.எச் இர்ஷாட் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன்று காலை 7 மணிக்கு மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமான சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வைத்திய அத்தியட்சகர் திரு. அசேல பெரேரா விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மஸ்கெலியா வலய உயர் பொலிஸ் அதிகாரி, அதிரடிப் படை அதிகாரிகள், மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர் மற்றும் அதிகாரிகள் சென் ஜோசப் தமிழ் வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நகர வர்த்தகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பரத நாட்டியத்துடன் ஆரம்பமானது. சட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், பணிஸ் உண்ணுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட விளையாட்டு போட்டி இடம் பெற்றது.
போட்டி இறுதியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில் வழங்கி கௌரவிக்கபட்டனர்.
இதன் மூலம் பிரதேச ஒற்றுமை நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




