வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா, மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இன்று (26.04) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூபியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ADVERTISEMENT
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கட்சியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




