வவுனியாவில் பாப்பரசர் நினைவாக துக்க தினம் அனுஸ்டிக்ப்பட்டது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று (26.04) நாடு பூராகவும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ADVERTISEMENT
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களால் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், பாப்பரசர் நினைவாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதல் கத்தோலிக்க மதகுருமார், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.





