இன்றைய தினம் கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடும் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் எதிர்காலப் பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஜயத்தில், நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. அனுர கருணாதிலக, கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக் கட்டிடத்தை சமூக மற்றும் அபிவிருத்தி நோக்கில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விரைவில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



