அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை தேர்தலை ஒட்டி திருக்கோவில் 5 ஆம் வட்டார வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் அவர்களின் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டு மக்களுக்கு கட்சி பற்றிய விளக்கங்கள் மற்றும் கடந்த காலங்களில் தமிழசுக் கட்சியினால் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் 5 ஆம் வட்டார வேட்பாளர் இந்துனேஷ் அவர்களினால் எதிர்காலத் திட்டங்கள், அபிவிருத்திகள் பற்றிய உரையும் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
