• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜே.வி.பியினரே உண்மையான இனவாதிகள் – கஜேந்திரகுமார் விளாசல்..!

Thamil by Thamil
April 25, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஜே.வி.பியினரே உண்மையான இனவாதிகள் – கஜேந்திரகுமார் விளாசல்..!
Share on FacebookShare on Twitter

“இனவாதம் இல்லை… இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜே.வி.பியினரே வெளிப்படுத்துகின்றனர். அவர்களே உண்மையான இனவாதிகள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் தெற்கில் மட்டுமில்லாது வடக்கு, கிழக்கிலும் தாங்கள் தான் பெரிய கட்சி என்றும், தமக்கே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்றும் ஜே.வி.பியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். உண்மையில் வடக்கு, கிழக்கிலுள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரே ஜே.வி.பியினர். ஏனையவர்களில் தமிழரசுக் கட்சி 8, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 1, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1, சுயேச்சைக் குழு 1 என்றவாறாகவே ஆசனங்கள் உள்ளன. இவ்வாறிருக்கையில் எதனடிப்படையில் தாம் தான் பெரிய கட்சி என்றும், தமக்கே மக்கள் ஆணை வழங்கி உள்ளனர் என்றும் ஜே.வி.பியினர் கூறுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

ADVERTISEMENT

இதனை உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் கூடத் தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்தப் பொய்ப் பிரச்சாரத்தையும், ஜே.வி.பியின் ஏமாற்றுத்தனங்களையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டோடு அவர்கள் இப்போது இல்லை எனவும் கூறி வருகின்றனர். அவர்களுக்குச் சமஷ்டியோ, சுயாட்சியோ அவசியமில்லை என்றும், அவர்களைச் சமத்துவமாகக் கருதினால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் அவர்கள் வாழ்வார்கள் என்றவாறாகப் பேசி வருகின்றனர்.

அதே போன்று கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழல் நிறைந்த இனவாதத்துடன் செயற்பட்டதாலேயே தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியவில்லை. ஆனால் நாம் ஊழல், இனவாதம் இல்லாத ஒரு கட்சியாகவே செயற்பட்டு வருவதால் எமக்கு தமிழ் மக்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இப்படி இன, மத பாகுபாடு பார்க்காதவர்கள் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் ஏன் நிறைவேற்றவில்லை? தாம் வழங்கிய வாககுறுதிகளை தாமே நிறைவேற்றத் தெரியாதவர்களாம்.

உண்மையில் இன, மத வேறுபாடு பார்க்காதவர்கள் என்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிதியைக் கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? அரசு என்றவுடன் மக்களை அச்சுறுத்தி மிரட்டல் விடுவதா? இவர்களது அரசியல் மாற்றம் எனக் கேட்கின்றோம்.

என்.பி.பி என்று சொல்லுகின்ற ஜே.வி.பியின் கதைகள், பேச்சுக்கள், செயற்பாடுகள் எல்லாமே ஏமாற்று வித்தைகள்தான். தாங்கள் இனவாதம் இல்லை என்றும், இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜே.வி.பியினர்தான் முற்றுமுழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை எனச் சொல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜே.வி.பியினர்தான்.

சின்னச் சின்ன விடயங்களுக்குக் கூட தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் தான் இனவாதத்தைத் தூண்டுவதாகச் சொல்லும் இவர்கள் தமிழ் மக்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வை வழங்க முடியாமல் இருக்கின்றனர்.

ஒரு பக்கம் நீங்கள் தான் பெரிய கட்சி என்றால் தையிட்டி விகாரை போன்ற இனவாதமில்லாத சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு இனவாதம் இல்லாமல் தீர்வை வழங்கலாமே. ஏன் இவர்களால் முடியவில்லை? ஆகவே, உங்களிடம் இனவாதம் இல்லை என்றால் முதலில் தையிட்டி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுக்க நீங்கள் தயாரா எனச் சவால் விடுக்கின்றோம்.

ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்க்க முடியவில்லை என்பதால் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து, இனவாதம் என்று பெயரைச் சூட்டிக்கொண்டு கடந்து செல்லப் பார்க்கின்றனர்.

உண்மையில் இனவாதம் என்றால் சட்டவிரோத நடவடிக்கைக்கு , நடவடிக்கை எடுக்காமல் அதனை முடக்குவது தான் இனவாதம். இவ்வாறாக தமிழ் மக்களின் ஒவ்வொரு விடயத்துக்கும் குறிப்பாக தாமே வழங்கிய வாக்குறுதிகள் உட்பட அனைத்தையும் தட்டிக்கழித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றனர்.

இத்தகைய பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு இந்தத் தேர்தலில் சந்தர்ப்பத்தை வழங்கினால் அது தமிழ் மக்களுக்கே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எங்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கொடூரமானவர், இனவாதி என்பதெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சிங்கள மக்களுக்கு இரண்டு வருடங்கள் எடுத்திருந்தன. ஆனால், பல்வேறு கதைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாதவராக தன்னுடையதும், தமது கட்சியினதும் உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகின்றார். ஆக அநுரவைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஆறு மாதங்கள் எடுத்துள்ளது.

எனவே, உண்மையான முகத்தை அறிந்துகொண்டுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் நிதானமாகச் சிந்தித்து எதிர்காலத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

Thamil

Thamil

Related Posts

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

by Thamil
May 12, 2025
0

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மட்டக்களப்பு தலைமையக...

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

by Thamil
May 12, 2025
0

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது....

இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 12, 2025
0

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட...

சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

by Thamil
May 12, 2025
0

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேரூந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வேலணை...

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

by Thamil
May 12, 2025
0

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு...

இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

by Thamil
May 12, 2025
0

மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குவந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் சீருடையில் மக்களை புகைப்படம், வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்...

போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

by Thamil
May 12, 2025
0

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

by Thamil
May 12, 2025
0

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான...

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

by Thamil
May 12, 2025
0

"அனைத்து அரசியல் கட்சிகளையும் திருடர்கள் என தெரிவித்த தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்று ஆட்சியமைக்க, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என...

Load More
Next Post
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் ரணில் – சட்டத்தரணி அறிவிப்பு..!

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் ரணில் - சட்டத்தரணி அறிவிப்பு..!

கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து..!

கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து..!

கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி