நாளைய தினம் 25-4-2025 அன்று பிரதோஷம் சித்திரை மாதத்தில் வந்திருக்கும் முதல் பிரதோஷமானது, வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த பிரதோஷ நாளில், ஈசனை வழிபாடு செய்ய நம்முடைய கடன் சுமை குறையும், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும், வீட்டில் மகாலட்சுமியின் வருகை இருக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
நாளைய தினம் வரக்கூடிய பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன, வழிபாடு செய்ய வேண்டிய லிங்கம் எது, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் சிவலிங்கம் பிடித்து வைக்க வேண்டும். பிள்ளையார் பிடிப்பது போலவே ஒரு லிங்கத்தை வில்வ இலையின் மேல் பிடித்து வைத்து, அதன் மேலே ஒரு குங்கும பொட்டு வைத்து, வில்வ இலைகளால் இந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
“ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி 11 முறை வில்வ இலைகளை அந்த மஞ்சள் லிங்கத்திற்கு அர்ச்சனை செய்து முடித்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து, 4 மஞ்சள் நிற வாழைப்பழம் நெய்வேதியம் வைத்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு இவ்வளவுதான். மஞ்சளால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு, அர்ச்சனை செய்த அந்த வில்வ இலைகளை பணப்பெட்டியில் வைக்க பண வரவு அதிகரிக்கும்.
இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, அந்த மஞ்சள் நிற வாழைப்பழத்தை பிரதோஷ நேரத்திலேயே கொண்டு போய் ஒரு பசு மாட்டிற்கு உங்கள் கையால் சாப்பிடுவதற்கு கொடுத்து விடுங்கள். இந்த வழிபாட்டை நாளைய தினம் எவரொருவர் வீட்டில் இருந்தபடி செய்கிறீர்களோ, அவருக்கு நிச்சயமாக வீட்டில் இருக்கும் பணக்கஷ்டமானது தீரும். மூன்று நாள் கழித்து அந்த மஞ்சளில் செய்து வைத்திருக்கும் சிவலிங்கத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து மண்பாங்கான இடத்தில் ஊற்றி விடலாம்.
ஒருவேளை நீங்கள் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு செல்கிறீர்கள், கோவிலில் இருப்பீர்கள் என்றால், என்ன செய்வது. இரண்டு விரலி மஞ்சள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, “ஓம் நமசிவாய” மந்திரத்தை கோவிலில் அமர்ந்தபடியே சொல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் போதே அங்கு விற்கும் வாழைப்பழங்களை வாங்கி ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். இல்லையென்றால் சில கோவில்களில் பசு இருக்கும்.
கோவிலில் இருக்கும் அந்த பசுவிற்கும் இந்த வாழைப்பழத்தை நீங்கள் உங்கள் கையால் கொடுத்து விடலாம். வழிபாட்டை முடித்துவிட்டு உங்கள் கையில் இருக்கும் விரலி மஞ்சள் கொண்டு வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தாலும், வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில பேருக்கு நல்ல வேலை கிடைக்காமல் இருப்பதால், பணக்கஷ்டம் இருக்கும். நல்ல தொழில் அமையாத காரணத்தால் பணக்கஷ்டம் இருக்கும். உங்களுக்கு அதுபோல பிரச்சனை இருந்தால் கூடவே நல்ல சந்தனத்தை வாங்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய தானமாக கொடுங்கள். இந்த சந்தன அபிஷேகத்தில் சிவபெருமான் மனம் குளிர்ந்து, நீங்கள் வேண்டிய வரத்தை கொடுத்து விடுவார். இதையும் படிக்கலாமே: 25-4-2025 வானில் தோன்றும் சிரித்த நிலா வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் வேலையில் இருக்கும் பிரச்சனை நீங்கும். சம்பளம் உயரும். வியாபாரத்தில் இருக்கும் தடைகள் விலகும். லாபம் உயரும் என்பது நம்பிக்கை. இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.