சிங்கப்பூா் பாராளுமன்றத்தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது . இத் தேர்தலில் 211 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.
இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (23) நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 97 தொகுதிகளில் 92 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறும் என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 1965ஆம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்திவரும் பி.ஏ.பி கட்சியே இந்த முறையும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்தக் கட்சி ஆட்சி செய்துவரும் சூழலில், அண்மைக் காலமாக அதன் மீது பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.