• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 11, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கொ லை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்காத நிலையில் அரசியல் குழுக்களை அகற்ற வேண்டும் என்பது கொ லை அச்சுறுத்தலே.!

Mathavi by Mathavi
April 23, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
கொ லை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்காத நிலையில் அரசியல் குழுக்களை அகற்ற வேண்டும் என்பது கொ லை அச்சுறுத்தலே.!
Share on FacebookShare on Twitter

அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதிகிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும். என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (23.04.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

“நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை” எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும்; பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே மதவாதமே. தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே. அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி பண்டாரநாயக்க, ஜெயவர்தன சந்திரிகா, ராஜபக்சே வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும்.

தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும்.

தையிட்டி சட்டவிரோத கட்டடத்திற்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் பொலிசார் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு; விசாரணை என பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்று விடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படு கொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்து விட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்திற்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்தரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும்.

தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படைத்தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்க தொடங்கிவிட்டனர்.

இந்த விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாமமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்கள் நோக்கம் எனலாம்.

நீண்ட கால இன அழிப்பிற்கும், இறுதி இனப்படு கொலைக்கும், நில ஆக்கிரமிப்பிற்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடை சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலிக் கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாள கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம்.

Thinakaran
398 678.9K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

      தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

      by Thamil
      May 10, 2025
      0

      2025 வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (10.05.2025) ஆரம்பமாகிறது.அதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரியவந்துள்ளது.

      வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

      வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

      by Thamil
      May 10, 2025
      0

      வெலிமடை பிரதேசத்தில் சற்று முன்னர் நடைபெற்ற பேரூந்து விபத்தொன்றில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று டயரப...

      கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

      கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

      by Thamil
      May 10, 2025
      0

      "ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்து அம்பாறை மாவட்ட மீனவர்கள் சாய்ந்தமருது மருதூர்...

      அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

      அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

      by Thamil
      May 10, 2025
      0

      முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்ட போது கல்கமுவ...

      மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

      மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

      by Thamil
      May 10, 2025
      0

      மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (10) மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான...

      உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

      உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

      by Thamil
      May 10, 2025
      0

      கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு,...

      கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

      கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

      by Thamil
      May 10, 2025
      0

      கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றைய தினம் (10.05.2025) ஏற்பட்டுள்ளது. இதன் போது, 6 தீயணைப்பு வாகனங்கள்,...

      வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

      வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

      by Mathavi
      May 10, 2025
      0

      "தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது. மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை." - இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு...

      கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

      கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

      by Thamil
      May 10, 2025
      0

      கொழும்பு ஆமர் வீதியில் உள்ள மிரானியா வீதிக்கு அருகில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு...

      Load More
      Next Post
      குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

      குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

      யாழில் மாணவனை உந்துருளியால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண்.!

      யாழில் மாணவனை உந்துருளியால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண்.!

      துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த டேன் பிரியசாத்; பெண் உட்பட மூவர் கைது.!

      துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த டேன் பிரியசாத்; பெண் உட்பட மூவர் கைது.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி