2025ம் ஆண்டு உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் 24.04.2025 இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைக்காக. தபால் மூலம் 3865பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளுக்கும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
ADVERTISEMENT