வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் இரவு வீடொன்றை சோதனை செய்த பொலிசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 போத்தல் சட்டவிரோத சாராயத்தை கைப்பற்றினர்.
அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயதுடைய நபர் ஒருவரை பொலிசார் கைதுசெய்தனர்.
ADVERTISEMENT
கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.