அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் காஸா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தை தடுக்க ஹவார்ட் பல்கலைக்கழகம் தனது நிர்வாக முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால், வரி விலக்கு இரத்துச் செய்யப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இதேவேளை பல பல்கலைக்கழகங்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹவார்ட் பல்கலைக்கழகம், அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹவார்ட் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது என்று தெரிவித்த ட்ரம்ப் நிர்வாகம், ஹவார்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.