1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சித்திரத் தேர் இன்றைய தினம் 20.04.1986 அன்று எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது.
யாழ் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இக்காலப்பகுதியில், தொண்டமனாறு அக்கரைப் பகுதியில் முகாமிட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் இதே நாளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த செல்வச்சந்நிதிப் பகுதியில் முன்னேறிய போது இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே குறித்த தேர் எரிக்கப்பட்டது.

ADVERTISEMENT
