இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த ஐந்தாண்டுக்கான 2025-2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.
மாவட்ட செயலகங்களில் உள்விவகாரப் பிரிவுகளை ஆரம்பித்தல் எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்கதிபர்(காணி) நளாயினி இன்பராஜ் தலைமையில் குறித்த அலுவலகம் மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ADVERTISEMENT
தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய நிகழ்வினை உத்தியோகத்தர்கள் நேரலையாக பார்வையிட்டனர்.


