இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
குறித்த திட்டமிடலானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் தயாரிக்கப்படவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பேராசிரியர் Jagath munasinghe (Town and country planing Expert) காலநிலை தொடர்பான தெளிவூட்டலை வழங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கியின் துறைசார்ந்த விரிவுரையா விவசாய, கடற்றொழில் அமைப்பு சார்ந்தோர், தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்ச்சியாளர்கள், பொது அமைப்பு சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.

