இன்றையதினம் சுன்னாகம் – கந்தரோடை, பழனி கோவிலடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவராசா பிரவீன் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளானது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் ஒருநபர் சிக்கிய நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ADVERTISEMENT
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







