யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலையில் பல அடிப்படை பிரச்சனைகள் காணப்படுவதாக மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர் இன்று நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்
அதாவது முக்கியமாக வைத்தியசாலையில் நான்கு வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டும் என்றும் இப்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர் என்றும் இதனால் தாம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் வைத்தியர் தனது கவலையை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஊடகங்கள் வாயிலாக வைத்தியசாலை தொடர்பாக பல போலியான செய்திகள் வருவதால் தமக்கு இங்கே வேலை செய்ய கஸ்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
மக்களின் கவனத்திற்கு வைத்தியசாலை தொடர்பாக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தம்மை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றார்
இவை சம்பந்தமாக பிரசேத அபிவிருத்திக்குழு தலைவர் குறிப்பிடுகையில் தம்மால் இயன்ற அளவு வெகு விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
