ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்றையதினம் (23.03.2025) தெல்லிப்பழை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் புளொட் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன், வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைக்கான தற்போதைய வேட்பாளர்களும், கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.


