• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பட்டலந்த விசாரணையை வைத்து தமிழின அழிப்பை மறைக்காதீர்கள்.!

Mathavi by Mathavi
March 20, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
பட்டலந்த விசாரணையை வைத்து தமிழின அழிப்பை மறைக்காதீர்கள்.!
Share on FacebookShare on Twitter

“பட்டலந்த என்ற சொல்லில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இனப் படு கொலையை மறைத்துவிட வேண்டாம். தமிழர் மீது நடத்தப்பட்டது இனப் படு கொலையல்ல என வாதிடும் நீங்கள் பட்டலந்த படு கொலை தொடர்பில் பேசுவதற்குத் தயாராகின்றீர்கள். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. விசாரணை வேண்டும். யார் அநியாயமாக கொல்லப்பட்டார்களோ, யார் நீதியின் கண்களுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை நாங்கள் தமிழர்களாக வலி உணர்ந்த மக்களாக வரவேற்கின்றோம். அதேநேரம், தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை நடந்த இனப் படு கொலைகள் தொடர்பில் நீங்கள் விவாதம் நடத்த வேண்டும் . விசாரணை செய்ய வேண்டும். நீதி வழங்க வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.

“பட்டலந்தை மட்டுமல்ல இந்த நாட்டில் வடக்கு, கிழக்கில் பல பகுதிகளில் வதை முகாம்கள் உள்ளன. தமிழர் வாழும் பிரதேசங்களில் நீங்கள் மண்ணைத் தோண்டினால் அங்கு தமிழரின் மனித எலும்புக்கூடுகளைக் காணும் பிரதேசங்களாக மாறியுள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் இந்த மண்ணில் அழிக்கப்பட்ட தனித் தேசிய இனம். நாங்கள் கேட்பது நீதி, அந்த நீதி நியாயமானதாக இருக்க வேண்டும். சர்வதேச விசாரணைக்கு உட்பட்டதாகவும், மனித நேயத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளித்தவையாக இருக்க வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய சிறீதரன் எம்.பி. மேலும் பேசுகையில்,

ADVERTISEMENT

“பட்டலந்த வதை முகாம் தொடர்பான செய்திகள் மிகப் பரவலாக வெளிவருகின்றன. பட்டலந்த என்பது 1988, 1989ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் இருந்த ஜே.வி.பி. போராளிகளை கைது செய்து கொண்டு சென்று அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை இவ்வளவு காலமும் கிடப்பில் இருந்து, இப்போது அல்ஜசீராவுக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டிக்குப் பின்னர் அந்த அறிக்கை வெளியில் வந்துள்ளது.

ஆனால் 88/89இல் நடந்த ஜே.வி.பி. மீதான படு கொலைகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்‌ஷ ஐ.நா.வில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளார். ஜே.வி.பி. மீதான படு கொலைகள் தொடர்பான செய்தியை அவர் அங்கு கொண்டு சென்றிருந்தார். ஆனால் அந்தக் காலத்தில் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை. ஜே.வி.பி. அடுத்து வந்த ஆண்டுகளில் சந்திரிகாவுடன் இணைந்து ஆட்சி செய்த போதும் பட்டலந்த படு கொலைகள் தொடர்பில் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. அந்த விடயத்தை இப்போது கையில் எடுத்திருப்பது நியாயமானது. இது தொடர்பில் விசாரணை வேண்டும். நாட்டில் படு கொலை செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு நீதி வேண்டும்.

கதிர்காமத்து அழகி பிரேமாவதி மனம்பேரியை சொந்தச் சகோதர இராணுவத்தினரே நிர்வாணமாக்கி படு கொலை செய்தார்கள் என்பது உலக வரலாற்றில் மிகக் கேவலமான பதிவாக உள்ளது. அவ்வாறான இந்த நாட்டில் அதற்கு நீதி வேண்டும் என்று நான் பல தடவைகள் கூறியுள்ளேன்.

அதேபோன்று தமிழ்த் தேசிய இனம் சார்ந்த இசைப்பிரியா, கிருஷாந்தி போன்றோர் பாலி யல் வன்புணர்வுக்குப் பின்னர் அவர்கள் இராணுவத்தால் படு கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான நீதி விசாரணைகளையும் நாங்கள் பல இடங்களில் கோருகின்றோம். தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய இனப் படு கொலை. ஆனால், சிங்கள மக்களுக்கு அவர்களின் எழுச்சி, கிளர்ச்சிகளுக்கு எதிராக இந்த வதை முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளில் தமிழர்கள் மீது படிப்படியாக பல இடங்களில் படு கொலை முயற்சிகள் இடம்பெற்றன.

குறிப்பாக 1956 – 1958 காலப்பகுதியில் இலங்கையில் தமிழினம் மீது நடந்த மிகப்பெரிய இனப் படு கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 1970, 1976 காலப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இனப் படு கொலைகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் 1983இல் நடந்த ஜூலை படு கொலை மிகப்பெரிய இனப் படு கொலையாக உலக அரங்கில் பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர் 2006இல் வாகரையில் நடந்த இனப் படு கொலை, 2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி இனப் படு கொலை என்பன இந்த நாட்டில் மிகவும் முக்கியமானவையே. இதற்கான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

நாங்கள் பாதிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட ஓர் இனம். உணவுகூட அனுப்பாமல் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 4 இலட்சத்து 20ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறுதி யுத்தம் நடைபெறும் போது, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியில் இருந்தனர். ஆனால், 70 ஆயிரம் பேரே இருக்கின்றனர் என்று அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கூறி, 70ஆயிரம் பேருக்கான உணவுப் பொருட்களையே அனுப்பினர். இதில் எத்தனை பேர் பட்டினியால் கொல்லப்பட்டிருப்பார்கள். இது தமிழ்த் தேசிய இனம் மீதான மிகப்பெரிய இனப் படு கொலையாக இந்த உலகத்தால் பார்க்கப்படுகின்றது.

கனடா நாடு இந்த விடயத்தில் தனது கரிசனையை கொண்டுள்ளது. அங்குள்ள இரண்டு கட்சிகள் இங்கு நடந்தவை இனப் படு கொலை என்று ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளன. சர்வதேச அடிப்படையில் இந்த விடயம் பேசப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கை விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், இங்கு நடைபெற்றது இனப் படு கொலை இல்லை என வாதிடுகின்றீர்கள். அது பற்றி பேசுவதில்லை. ஆனால், பட்டலந்த படு கொலை தொடர்பில் பேசுவதற்கு தயாராகின்றீர்கள். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. விசாரணை வேண்டும். யார் அநியாயமாகக் கொல்லப்பட்டார்களோ, யார் நீதியின் கண்களுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை நாங்கள் தமிழர்களாக வலி உணர்ந்த மக்களாக வரவேற்கின்றோம்.

அதேநேரம், தமிழர்களுக்கு நடந்த இனப் படு கொலை தொடர்பில், தமிழ்த் தேசிய இனத்தின் மீதான படு கொலை தொடர்பில் ஏன் இந்த அரசால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மனித உரிமைகள் பேரவையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். பன்னாட்டு நீதியாளர்களின் ஆலோசனைகளை பெறுகின்றோம், தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்கின்றோம், தமிழ் மக்கள் மீதான இனப் படு கொலைக்கு நீதி காண்பதற்கு கலப்பு பொறிமுறையை கையாளுகின்றோம் என்று ஏற்றுக்கொண்டார். ஓர் அரசு இருக்கும் போது ஏற்றுக்கொண்டதை கோட்டாபய வந்ததும் நிராகரித்தார். இந்த அரசும் வந்த போது இதனை எதிர்த்து நிராகரித்துள்ளனர்.

நாங்கள் இந்த மண்ணில் உங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகின்றோம். இதனை நாங்கள் பல தடவைகள் பதிவு செய்துள்ளோம். ஆனால், நீங்கள் நீங்களாகவும், நாங்கள் நாங்களாகவும் எங்களுடைய தனித்துவங்கள், அடையாளங்கள் நிராகரிக்கப்படாமல் வாழ்வதற்கான உரிமைகள் இந்த மண்ணில் இருக்க வேண்டும். அது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வாகத்தான் அமைய முடியும். ஒற்றையாட்சி இலங்கைக்குள் இந்தத் தீர்வு ஒரு இனத்தை இன்னுமொரு இனம் சுரண்ட முடியாமல், கபளிகரம் செய்ய முடியாமல் மற்றும் அடக்காமல் இருப்பதற்கான வழிமுறை ஒற்றையாட்சிக்குள் உருவாக முடியாது. ஆனால், ஒரு நாடாக இருப்பதற்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பது, அந்த நாட்டில் வாழும் பல்தேசிய இனங்களை அரவணைத்து செல்வதற்கான மிகப்பெரிய பாதையாக மாறும்.

பட்டலந்த வதை முகாம் எல்லோருடைய இரத்தத்தையும் உறைய வைத்துள்ளது. அங்கு நடந்தது குற்றமென்றால் அது நிரூபிக்கப்படவும், உரியவர்கள் கைது செய்யப்படவும் தண்டடிக்கப்படவும் வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதேபோன்று நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏன் விசாரணை செய்ய தயங்குகின்றீர்கள்? அத்துடன் நாகர்கோவிலில் நடந்த படு கொலைகள், மண்டைதீவில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பில் ஏன் நீங்கள் சிந்திக்க தவறுகின்றீர்கள்? குமுதினி படகில் கொல்லப்பட்ட மக்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது? குருநகர் கடலில் கொல்லப்பட்டவர்களுக்கு, கொக்கட்டிச்சோலையில் கொல்லப்பட்டவர்களுக்கு, வாகரையில் கொல்லப்பட்டவர்களுக்கு, திருகோணமலையில் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது?. நெடுங்கேணி – ஒலுமடுவில், அம்பாறை மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது?

கொத்துக்கொத்தாகப் பல இடங்களில் கொல்லப்பட்டு அழிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் நிலங்களை இழந்துள்ளது. இன்னும் தமது சொந்த இடங்களுக்கு போக முடியாமல் மக்கள் இருக்கின்றனர். பௌத்த தேவாலயங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த பிரதேசங்களின் காணிகளை பௌத்த இடங்களுக்குரிய காணி என்று கூறுகின்றனர். இன்னும் காணிகள் எடுக்கப்படுகின்றன. நாட்டின் நீதி என்ன? நீதி எவ்வாறு கிடைக்கும்?

யாழ். செம்மணி சுடலையில் மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன. அதற்கான நீதி இன்னும் வெளிவரவில்லை. அண்மையில் முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் வீதி அகலப்படுத்தும் பணியின்போது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டவர்களினதாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பெண் போராளிகளின் உள்ளாடைகளுடனும், இலக்கத்தகளுடனும் அவை அந்த புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தாக்கப்பட்ட விதத்தைக்கூட தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் வாயைத் திறந்த நிலையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். எவ்வளவு சித்திரவதை செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

பட்டலந்தை மட்டுமல்ல இந்த நாட்டில் வடக்கு, கிழக்கில் பலபகுதிகளில் வதை முகாம்கள் உள்ளன. தமிழர் வாழும் பிரதேசங்களில் நீங்கள் மண்ணைத் தோண்டினால் அங்கு தமிழரின் மனித எலும்புகூடுகளை காணும் பிரதேசங்களாக மாறியுள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் இந்த மண்ணில் அழிக்கப்பட்ட தனி தேசிய இனம். நாங்கள் கேட்பது நீதி, அந்த நீதி நியாயமானதாக இருக்க வேண்டும். சர்வதேச விசாரணைக்கு உட்பட்டதாகவும், மனித நேயத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளித்தவையாக இருக்க வேண்டும்.

மனிதர்களை கொல்வதில் மிகப்பெரிய குற்றமான உணவு அனுப்பாமல் கொல்லுதல், அவர்கள் மீது பராச் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரசு குண்டுகளையும் வீசி கொல்லுதல், மிகப்பெரிய தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தல் என்பன மிகப்பெரிய போர்க் குற்றங்களாகும். வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் மிகப்பெரிய அளவில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த குண்டுகளின் அடையாளங்களுடன் மக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

படைகளிடம் பலர் உயிருடன் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குறைவாக நிறுத்தப்பட்டு உணவுகளை அனுப்பிய போது எத்தனையோ ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் வழங்கிய கஞ்சிக்காக சின்ன சின்ன கிண்ணங்களுடன் வரிசையில் இருந்த போது பராச் குண்டுகளில் சிக்கி கொல்லப்பட்ட வரலாறு அந்த மண்ணில் இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக அதனை நேரில் கண்டவன் என்ற வகையில் கூறுகின்றேன். தயவு செய்து நீதி விசாரணையை எல்லாவற்றுக்கும் கொண்டு வாருங்கள். அந்த மக்கள் நம்பக்கூடிய வகையில் அதனை செய்யுங்கள். அதுவே நல்ல செய்தியாக அமையும்.

பட்டலந்தவில் உங்களுடைய போராளிகளுக்கு நடந்தவற்றை மட்டும் விசாரணைக்குட்படுத்துவது ஒரு பக்கச்சார்பானதாக மாறும். உங்களை நாங்கள் ஜே.வி.பி. போராளிகளாகவே பார்த்தோம். உங்களைப் பயங்கரவாதிகளாக பார்க்கவில்லை. ஜே.வி.பி. போராளிகள் கிளர்ச்சியாளர்கள் என்று கூறினாலும் உங்களுக்காக இரக்கத்துடன் பேசியவர்கள் நாங்கள். களனி ஆற்றில் ஜே.வி.பி. இளைஞர்கள் கழுத்து வெட்டப்பட்டு மிதந்து வந்தபோது அவற்றைப் பார்த்து கவலையடைந்தவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். எவர் கொல்லப்பட்டாலும் அதற்கான விசாரணை வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

பட்டலந்தவில் இருந்த வதை முகாம் ஒரே இனத்துக்குள் இராணுவத்தால் படு கொலை செய்யப்பட்டவர்கள். ஆனால், எங்கள் மீது திட்டமிட்டு 80 வருடங்களாக மெல்ல மெல்ல எமது நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல இலட்சமான மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர். உணவு அனுப்பாமல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப் படு கொலை செய்தனர். இதனால் தமிழ்த் தேசிய மக்கள் மீதான இனப் படு கொலை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியது. இதற்கான நீதி விசாரணை வேண்டும். பட்டலந்த என்ற சொல்லில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இனப் படு கொலையை மறைத்துவிட வேண்டாம். அது சர்வதேச அளவில் பேசப்படும் பொருள்.

இறுதி யுத்தம் நடைபெற்ற போது பல நாடுகளின் செய்மதிகள் இங்கு நடந்த படு கொலைகளை மிகத்துள்ளியமாகப் படம் பிடித்து வைத்துள்ளன. உலக நாடுகளிடம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் தமிழ் மக்களின் சாட்சியங்களாக இருக்கின்றன. இதன்படி சரியான நீதி விசாரணை வேண்டும்.

இந்த நாட்டில் உங்களின் கலாசாரம், பண்பாடு, அடையாளம் என்பனவற்றை மதிக்கின்றோம். உங்களுடன் சேர்ந்து வரத் தயாராக இருக்கின்றோம். அதேபோன்று தமிழர்களுடைய தனித்துவம், அவர்களின் தேசிய அடையாளம், கலாசார அடையாளம் என்பனவற்றைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கான நீதியை வழங்க வேண்டும். அதற்குத் தயாராகுங்கள்.

இப்போது முக்கிய சாட்சியாகக் காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டங்கள் மூவாயிரம் நாட்களையும் கடந்து வீதிகளில் நடக்கின்றன. அவற்றைக் கருத்தில் எடுத்து நீதிக்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும், அவை உண்மையை கொண்டுவர வேண்டும்.” – என்றார்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தமிழரசு – முன்னணித் தலைவர்கள் சந்திப்பு: இணக்கப்பாடு எதுவுமே வரவில்லை; ஆனால் இணங்கிச் செயற்படுவோம்.!

      தமிழரசு – முன்னணித் தலைவர்கள் சந்திப்பு: இணக்கப்பாடு எதுவுமே வரவில்லை; ஆனால் இணங்கிச் செயற்படுவோம்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு தலைவர்களுக்கும்...

      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

      வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் ஒருவர் கைது..!

      வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் ஒருவர் கைது..!

      by Thamil
      May 30, 2025
      0

      இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசாளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச...

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன் ஒருவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார். பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா...

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) இரவு 9 மணி முதல் நாளை (31) இரவு 9...

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      by Thamil
      May 30, 2025
      0

      வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில்...

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      by Thamil
      May 30, 2025
      0

      அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக...

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      by Thamil
      May 30, 2025
      0

      நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மின்தடைகள் குறித்து இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்...

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை - நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற...

      Load More
      Next Post
      உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி.!

      உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி.!

      வெளியாட்கள் பரீட்சை நிலைய வளாகத்தினுள் புகுந்து தாக்குதல்; பொலிஸ் பாதுகாப்பு கோரிய பரீட்சை மேற்பார்வையாளர்.!

      வெளியாட்கள் பரீட்சை நிலைய வளாகத்தினுள் புகுந்து தாக்குதல்; பொலிஸ் பாதுகாப்பு கோரிய பரீட்சை மேற்பார்வையாளர்.!

      வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பு மனுத் தாக்கல்.!

      வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பு மனுத் தாக்கல்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி