• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடக்கில் உள்ள சிகிச்சை நிலையங்களை வினைத்திறனுடன் இயங்க வைப்பது குறித்து கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
March 18, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
வடக்கில் உள்ள சிகிச்சை நிலையங்களை வினைத்திறனுடன் இயங்க வைப்பது குறித்து கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17.03.2025) இடம்பெற்றது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும் அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்படமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை எவ்வாறு தீர்த்து இவற்றை இயங்க வைக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

ADVERTISEMENT

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

3 தசாப்தங்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை என்றும், இதனைக் கருத்தில்கொண்டு ஆளணி மறுசீரமைப்பு, வெற்றிடமாகவுள்ள ஆளணிகளை நிரப்புவதற்கு மத்திய சுகாதார அமைச்சைக் கோருவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நிதிக்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், வவுனியா மற்றும் மாங்குளம் மருத்துவமனைகளில் பொறுப்பு மருத்துவ அத்தியட்சகர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, முன்னாள் மருத்துவ பீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      யாழில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.!

      யாழில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.!

      by Mathavi
      May 31, 2025
      0

      நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் - ஊரெழு பகுதியில் 40 லீற்றர் கசிப்புடன் கைது...

      பாலத்துக்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

      பாலத்துக்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      கொழும்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மோதரை, அளுத்மாவத்தை வீதியிலுள்ள பாலத்துக்கு அருகில் இருந்து நேற்று மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக...

      இளைஞனின் மனிதநேயம் மிக்க செயலால் குவியும் பாராட்டுகள்.!

      இளைஞனின் மனிதநேயம் மிக்க செயலால் குவியும் பாராட்டுகள்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி அதிகாலை ஏற்பட்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்தின்...

      யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!

      யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!

      by Mathavi
      May 31, 2025
      0

      15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த...

      கீரிமலை ஜனாதிபதி மாளிகையை யாழ். பல்கலைக்கு வழங்க விடாமல் முரண்டு பிடிக்கும் ஆளும் தரப்பினர்.!

      கீரிமலை ஜனாதிபதி மாளிகையை யாழ். பல்கலைக்கு வழங்க விடாமல் முரண்டு பிடிக்கும் ஆளும் தரப்பினர்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      கீரிமலை ஜனாதிபதி மாளிகையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், அர்ச்சுனா முன்வைத்த நிலையில் அதனை பல்கலைக்கழகத்தால் பராமரிக்க முடியுமா என்ற...

      தமிழரசு – முன்னணித் தலைவர்கள் சந்திப்பு: இணக்கப்பாடு எதுவுமே வரவில்லை; ஆனால் இணங்கிச் செயற்படுவோம்.!

      தமிழரசு – முன்னணித் தலைவர்கள் சந்திப்பு: இணக்கப்பாடு எதுவுமே வரவில்லை; ஆனால் இணங்கிச் செயற்படுவோம்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு தலைவர்களுக்கும்...

      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

      வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் ஒருவர் கைது..!

      வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட காசாளர் ஒருவர் கைது..!

      by Thamil
      May 30, 2025
      0

      இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசாளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச...

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன் ஒருவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார். பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா...

      Load More
      Next Post
      வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாக பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)

      வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாக பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)

      வெற்றிலைக்கேணி கடலில் இன்று பரபரப்பு- மூன்றாவது நாளாக தொடரும் மோதல்.! (சிறப்பு இணைப்பு)

      மீனவர்களிடையே தொடரும் முறுகல் நிலை; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை.!

      உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்.!

      உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி