நீர்கொழும்பு – பெரியமுல்லை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியில் பயணித்த மூதாட்டி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், படுகாயமடைந்த மூதாட்டி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து 50 வயதுடைய பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.