புதுக்குடியிருப்பில் இன்று (12.03.2025) பிற்பகல் 12.30 மணியளவில் உந்துருளி ஒன்று மகேந்திரா கப்ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த உந்துருளி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





