கடந்த வருடம் புகையிரத விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இனுவில் இந்து விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ஆனந்தராசா சயந்தனின் நினைவாக இனுவில் மத்திய பேரூந்து நிலையம் புனரமைக்கபட்டு இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வருடம் இனுவில் பகுதியில் புகையிரத கடவையில் விபத்துக்குள்ளாகி இறந்த ஆனந்தராசா சயந்தனின் நினைவாக பல்வேறு நிகழ்வுகள் இனுவில் இந்து விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது ஓராண்டு நினைவாக கடந்த 1958 ஆம் இனுவில் இந்து விளையாட்டு கழகத்தினால் அமைக்கப்பட்ட கருவில் மத்திய பேரூந்து நிலையம் புனரமைக்கப்பட்டு அவரது நினைவாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் பொழுது விருந்தினர்களாக மத்திய கல்லூரி அதிபர் துரைசிங்கம், இனுவில் தென்னிந்திய திருச்சபை லங்கேஸாவரன், அருட்தந்தை, மக்லியோட் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான தனகோபி, உதயகுமாரன், இனுவில் இந்து விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



