பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் படு கொ லையைத் திட்டமிட்டனர் எனக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் நேற்று கைதாகியுள்ளனர்.
கடந்த வாரம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல் வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனேமுல்ல சஞ்சீவவைக் கொ லை செய்வதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
கம்பஹா பகுதியில் வைத்துக் கொழும்பு குற்றப் பிரிவினரால் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.