பொலனறுவை கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய கைதிகள் நால்வரில் இருவரை சோமவத்திய காட்டுப்பகுதியில் வைத்து வெலிகந்த பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்திருந்த கைதிகள் நான்கு பேர் இன்று (25) அதிகாலை வேளையில் தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து வெலிகந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டாக மேற்கொண்ட தேடுதலின்போதே தப்பியோடிய நால்வரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் முல்லைத்தீவு,காலி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலனறுவை வலயத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது டன் அடுத்த இரு கைதிகளையும் கைது செய்வதற்காக வேண்டி தொடர்ந்தும் இராணுவத்தினரும் வெலிகந்த பொலிஸாரும் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.