சுரேன் குருசுவாமி, தேர்தல் காலத்தில் தன்னை அவதூறுபடுத்தும் விதமாக செயல்பட்ட விந்தன் கனகரத்தின் மீது தொடரப்பட்ட அவதூறு மற்றும் நஷ்ட ஈட்டு வழக்கு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது பிரதிவாதியான விந்தன் கனகரட்ணம் சமூகமளிக்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்கிய சுரேன் குரு சுவாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஊடக சந்திப்பை நடாத்தி இருந்தார்.
இந்நிலையில் தன்னை தேர்தல் காலத்தில் வேண்டுமென்று அவதூறு பரப்பியதாக வேட்பாளரான சுரேன் குருசாமி, வேண்டுமென்றே அவதூறு பரப்பியமை மற்றும் நஷ்ட ஈடு கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கானது இன்றையதினம் திங்கட்கிழமை அழைக்கப்பட்டபோது எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்ட முன்னாள் வடககு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் சமூகமளிக்கவில்ல.
குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவித்த வழக்காளியான சுரேன் குரு சுவாமி, ஊடக சந்திப்பில் என்னை பற்றி பொய் குற்றச்சாட்டுகளை விந்தன் கனகரட்ணம் முன்வைத்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் எந்த சட்ட நடவடிக்கையும் தான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்ட விந்தன் நீதிமன்றத்திற்கு ஏன் சமூகமளிக்காது விட்டார் என்பது தொடர்பில் தனக்கு தெரியாது என தெரிவித்தார்.