களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெட்டுமகட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (21) இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு, நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
களுத்துறை, வெட்டுமகட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரை நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவ இடத்திற்கு அருகில் வைத்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.