வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ, மோகன்வத்த பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ADVERTISEMENT
சடலமானது இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.