இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை காலை கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் இந்தச் சந்திப்பில் இணைந்துகொண்டார்.