வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் முதற் கட்டமாக 20 பயனாளிகளுக்கு 40 குதிரை வலு கொண்ட யமகா இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்திற்குட்பட்ட துணை சங்கங்களின் 20 பயனாளிகளுக்கு சமாச தலைவர் த.தங்கரூபனால் தாளையடி நன்னீர் திட்ட அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டது.
ஏனைய பயனாளிகளுக்கான படகு இயந்திரங்களை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் 5 வருடங்களுக்குள் கையளிக்கப்பட்ட படகு மற்றும் இயந்திரத்தை விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சமாச தலைவர் தங்கரூபன் தெரிவித்துள்ளார்.