வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் 2025ம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவானது இன்று(30) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
11 மாணவர்கள் புதிதாக வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ADVERTISEMENT
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

