கட்டுநாயக்க, எவரியவத்த பிரதேசத்தில் கஜமுத்துக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
நில்லம மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 38 மற்றும் 43 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.