இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 34 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் – இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 34 இந்திய மீனவர்கள் மூன்று படகுகளில் கிளிநொச்சி கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 34 பேரும் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.